Monday, May 11, 2009
எத்தனை நன்மைகள்
எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன் நான் .........
நன்றி ராஜா ........ நன்றி ராஜா
௧. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்
தேவனே உம்மை துதிப்பேன்
௨. பெலவீணன் என்று தள்ளிவிடாமல்
பெலத்தால் இடைகட்டினீர்
௩.பாவத்திலே மரித்துபோய் இருந்த்தேன்
கிருபையால் இரச்சித்தீரே
௪. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
எனக்காய் மீண்டும் வருவீர்
௫. கரங்களை பிடித்து கண்மனிபோல
காலமெல்லாம் காத்தீர்
௬. பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி
பூரண சுகமாக்கிநீர்
௭. முள்முடி தாங்கி திரு ரத்தம் சிந்தி
சாத்தானை ஜெயித்து விட்டீர்
௮. நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
விவரிக்க முடியாதையா
Subscribe to:
Posts (Atom)